Last Updated:
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. இதனை மாவட்ட ஆட்சியர் ரேவதி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய வீரத் தற்காப்புக் கலைகளான சிலம்பம், வாள்வீச்சு, மான்கொம்பு, கத்திச்சண்டை, கட்டைக்கால் சிலம்பம், தீப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை நிகழ்த்திக் காட்டி அசத்தினர். குறிப்பாக, தீப்பந்தம் ஏந்தி சிலம்பம் சுழற்றிய மாணவர்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

