அடிசெக்க.. 1100 ஏக்கர்.. ஆக்ஷன் மோடில் இறங்கிய விஜய் அரசு! ஓசூர், சூளகிரி மக்களுக்கு ஜாக்பாட்..!
தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி விஜய் தலைமையிலான ஆட்சியிலும் தொடர்கிறது, சமீபத்தில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி அரசுடன் புரிந்துணர்வு செய்தது.
இதை தொடர்ந்து பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. இதனால் தொழிற்துறைக்கான இடம் தமிழ்நாட்டில் பற்றாக்குறை அளவை எட்டும் முன் அதிரடி நடவடிக்கையில் விஜய் தலைமையிலான அரசு இறங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓசூரை முக்கிய தொழிற்துறை பகுதியாக மாற்றினாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடித்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும், தொழிற்துறைக்கான இடத்தை உருவாக்கவும் சூளகிரியை தேர்வு செய்யப்பட்டது.
இதில் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்து 99 சதவீத நிலம் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் 2வது கட்டத்திற்கான முயற்சிகள் திமுக ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. இதை தொடரும் வகையில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஓசூரின் 4வது சிப்காட் ஆகவும், சூளகிரியின் 2வது சிப்காட் தொழிறப்பூங்காவை அமைப்பதற்காக சுற்றுசூழல் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
சூளகிரியின் 2வது சிப்காட் சுமார் 1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது, இத்தொழிற் பூங்கா மூலம் சுமார் 17000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
முதல் கட்ட திட்டத்திற்கு நிறுவனங்கள் மத்தியில் அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் மொத்த இடமும் குத்தகைக்கு விடப்பட்டது, சூளகிரி சேலம் – சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்திருக்கும் காரணத்தால் தயாரிக்கப்படும் பொருட்கள் உடனடியாகவும், வேகமாகவும் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்ய முடியும் என்பதால் சூளகிரி சிப்காட் தற்போது ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது.
சூளகிரி சிப்காட் தற்போது ஒரு எலக்ட்ரிக் வாகன பிரிவாக மாறியிருக்கும் வேளையில் மேம்பட்ட உற்பதி, தொழில்நுட்பம் சார்ந்த துறை நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக இருக்கக்கூடும்.
மேலும் 2வது சூளகிரி சிப்காட் அமைப்பதற்கு முன்பே செயின்ட் கோபைன் மற்றும் அதிவேக ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான Ultraviolette Automotive இங்கு தொழிற்சாலை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்புந்தம் கையெழுத்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

