கலஹா நில்லம்ப பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கலஹா, நில்லம்ப, குருகலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி, சமையலறையில் இருந்த புளியை எடுத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அதன் கொட்டை தொண்டையில் சிக்கியுள்ளது.
சம்பவத்தை கவனித்த சிறுமியின் தாயாரும் உறவினர்களும் அவரை உடனடியாக பேராதனை போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

