• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || புலி முகாம் புரளிக்கு விளக்கமறியல் நீடிப்பு

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || புலி முகாம் புரளிக்கு விளக்கமறியல் நீடிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாகப் போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, புதன்கிழமை (02) அன்று உத்தரவிட்டுள்ளார்.


சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னரே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், கண்டகண்டார மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எனக் கூறப்படும் சங்கீத் ஜெயசேகர என்பவராவார்.


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


நீதிமன்றத்தில் ஆஜராகிய பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அண்டர் கான்டினென்டல் மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய சந்தேகநபர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, கிளிநொச்சி, பளைப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புக் காடு ஒன்றிற்குள் எல்.டி.இ.டி அமைப்புக்குச் சொந்தமான பயிற்சி முகாமும் வெடிகுண்டு தயாரிப்புத் தொழிற்சாலையும் உள்ளதாகத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.


சந்தேகநபர் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களைப் பொலிஸ் மா அதிபர் அடுத்த நாளே முற்றிலுமாக மறுத்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காகக் கிளிநொச்சி பகுதிக்கு விசாரணைக் குழு ஒன்றும் பொலிஸ் மோப்ப நாய்களும் அனுப்பப்பட்டுச் சோதனையிடப்பட்ட போதிலும், அங்கு வெடிகுண்டுத் தொழிற்சாலை ஒன்று உள்ளமைக்கான எந்தவொரு சாட்சியமும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் பளைப் பாதுகாப்புக் காப்பிற்குள் சென்று விவசாய மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் பளைப் பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றத்தில் விடயங்களை அறிவித்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


கொழும்புப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதியன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சந்தேகநபர், கிளிநொச்சியின் பளைப் பாதுகாப்புக் காட்டில் எல்.டி.இ.டி முகாமும் வெடிகுண்டு தயாரிப்புத் தொழிற்சாலையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதோடு, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியது எனவும் விளக்கமளித்தனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கிளிநொச்சிப் பகுதி வலய வன அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தாம் இத்தகைய அடிப்படையற்ற கருத்தைக் கூறியதாகச் சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, குறித்த வன அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்ட போது, தாங்கள் அவ்வாறான எதையும் கூறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், வன அதிகாரியுடன் தொடர்புகொண்டு விசாரித்ததில் சந்தேகநபர் கூறியது முற்றிலும் பொய்யான தகவல் என்பதும் உறுதியாகியுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.


பளைப் பாதுகாப்புக் காப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பண்ணை ஒன்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துத் தமிழ்ப் வர்த்தகர் ஒருவருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், சந்தேகநபர் பல போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளமைக்கான தகவல்களும் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், சந்தேகநபரின் தொலைபேசி ஆவணங்கள் மற்றும் அவர் 3 தேசிய அடையாள அட்டைகளைப் கைவசம் வைத்திருந்தது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளமையால், சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.


சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்குப் பணித்தார்.


 



Read More

Previous Post

சரவாக் MTUC, 24/7 லிண்டுங் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவு; கூடுதல் பங்களிப்பு நியாயமானது எனக் கூறுகிறது – Malaysiakini

Next Post

ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி

Next Post
ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி

ஆபரேஷன் சிந்தூர் டூ அயோத்தி ராமர் கோவில் CEO நியமனம் வரை! யார் இந்த ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin