கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன்று இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வான் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் வானில் பயணித்த ஏழு பயணிகள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காகக் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், மோதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

