
பயிற்சி விமானியொருவர் இயக்கிய இலகுரக பயிற்சி விமானமொன்று, செவ்வாய்க்கிழமை (25) ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் விமானி எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விமானம் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

