தரம் குறைந்த மின்சார தயாரிப்புகளைப் பயன்படுத்துவது மின்சார அதிர்ச்சி (Electric shocks), மின் கசிவு (Electrical leakage) மற்றும் எதிர்பாராத தீ விபத்துகளுக்கான (Fires) அபாயத்தை பெருமளவில் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், கட்டாயமான இலங்கை தரக்கட்டளை சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார கார்டு ரீல்களை (Electrical cord reels) விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த குற்றத்துக்காக, அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ரூ.200,000 அபராதம் விதித்துள்ளது.
அனுராதபுரம் 11ஆம் வீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கடந்த 18ஆம் திகதியன்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, SLS சான்றிதழ் பெறாத குறிப்பிட்ட மின்சார கார்டு ரீல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த சட்டவிரோதச் செயலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தது.
இந்த வழக்கு கடந்த 21ஆம் திகதின்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ. 200,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மின்சார கார்டு ரீல்கள் போன்ற மின் சாதனங்கள் உரிய தரநிலைகளுக்கு (Standards) உட்பட்டிருப்பது மிகவும் அவசியமானது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தரம் குறைந்த மின்சார தயாரிப்புகளைப் பயன்படுத்துவது மின்சார அதிர்ச்சி (Electric shocks), மின் கசிவு (Electrical leakage) மற்றும் எதிர்பாராத தீ விபத்துகளுக்கான (Fires) அபாயத்தை பெருமளவில் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

