ஜார்ஜ் டவுன்: பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் வியாழக்கிழமையன்று வனவிலங்குகளின் பாகங்கள் அடங்கிய, RM5,000 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்ட 45 பொருட்களைக் கடத்தும் முயற்சியை எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) முறியடித்தது.
சீனா சதர்ன் ஏர்லைன் விமானத்தில் சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்தடைந்த இந்தோனேசிய நபர் ஒருவரின் பயணப் பெட்டியைச் சோதனையிட்டபோது, விலங்குகளின் கொம்புகள் என சந்தேகிக்கப்படும் அந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக AKPS இன்று ஒரு அறிக்கையில் அறிவித்தது.
சட்டம் 716-இன் பிரிவு 68(1)(b)-இன் கீழ், 57 வயதான அந்த நபர், அனுமதி அல்லது செல்லுபடியாகும் ஆவணம் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வனவிலங்கு பாகங்களைக் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது என்று அந்த முகமை கூறியது.


