இந்த அரசுத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வட்டி மூலமாகவே 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக எவ்வாறு வருமானம் ஈட்டலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். இதற்கான கணக்கீடு மிகவும் எளிமையானது. இதில் நீங்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்தத் தொகையை முதலீடு செய்ய வேண்டும். அஞ்சலக கால வைப்புத் திட்ட (Post Office TD) கணக்கீட்டின்படி, 5 ஆண்டுகளுக்கு 4.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் உங்களுக்கு மொத்தம் 6,52,477 ரூபாய் கிடைக்கும். இதில், 2,02,477 ரூபாய் என்பது வட்டி மூலம் கிடைக்கும் வருமானமாகும்.
