இந்தியன் ஆயில் மற்றும் பிபிசிஎல் ஆகிய இரு நிறுவனங்களும், இதுவரை ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி-ஐ முடிக்காத தங்கள் வாடிக்கையாளர்களை, அதை முடிக்குமாறு கேட்டுக்கொண்டன. இந்த நிலையில், இ-கேஒய்சி செய்யத் தவறினால், குடும்பங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான நிலையில், அவர்கள் இன்டேன் கேஸ், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

