Last Updated:
மத்திய ரிசர்வ் காவல் படையில் 5 மாதங்களில் 19 வீரர்கள் தற்கொலை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை. உள்துறை அமைச்சகம், சிஆர்பிஎஃப் டிஜிக்கு நோட்டீஸ்.
2026 ஜனவரி முதல் மே 22 வரையிலான ஐந்து மாதங்களில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 19 வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 2025-ம் ஆண்டில் அதிகபட்சமாக 59 வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக அப்படையின் அதிகாரப்பூர்வத் தரவுகளை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியானது.

