ஆனால், சுதந்திரப் போராட்ட வீரரும், பிரபல சோஷலிசவாதியுமான ராம் மனோகர் லோகியா, கோவாவை அந்நியர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான ஆயுதத்தைக் கையிலெடுத்தார். தமது நண்பர் டாக்டர் ஜூலியோ மெனசஸ் விடுத்த அழைப்பின்பேரில், லோகியா கோவாவுக்குச் சென்றார். அங்கு. கோவா மக்கள் மீது, பிரிட்டிஷாரைவிட மோசமான முறையில், போர்ச்சுக்கீசியர்கள் கட்டவிழ்த்து விட்டிருந்த கொடுமைகளைக் கண்ட அவர், கோவா மக்களின் உரிமைகளுக்காக, ஜூன் 18, 1946-ல் போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார். இந்த நாளை கோவா புரட்சி தினம் என்று அவர் அழைத்திருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

