கோலாலம்பூர்:
லெம்பாகா தாபோங் ஹாஜி (TH) நிறுவனத்தின் அரச விசாரணை ஆணைய (RCI) அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்புக்கு வழிவகுத்த நிதி முறைகேடுகள் அல்லது ‘சாகாவ்’ (sakau) செயல்கள் உண்மையில் நடந்துள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் (MITC) நடைபெற்ற 2026 பிகேஆர் தேசிய மாநாட்டில் உரையை ஆற்றிய அவர், முஸ்லிம்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து பணம் இழக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
12 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைத் தவிர்ப்பதற்கோ அல்லது கேள்வி எழுப்புவதற்கோ இடமில்லை என்றும், தவறு செய்தவர்கள் எத்தகைய பதவியில் இருந்தாலும் அல்லது எந்த அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
இச்சீர்திருத்த நடவடிக்கைகளைப் அரசியல் பழிவாங்கல் என்று முத்திரை குத்துவது அபத்தமானது என்று குறிப்பிட்ட அவர், Tabung Haji விவகாரம் தீர்க்கப்பட்ட பின்னர், பெல்டா (Felda) நிறுவனத்தின் மேலாண்மை குறித்த விசாரணைகளில் கவனம் செலுத்தப்படும் என்று அன்வர் அரசரின் உத்தரவையும் மேற்கோள் காட்டினார்.


