ஷா ஆலம்: சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS), மொத்தம் RM103.69 மில்லியன் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும், RM6.1 பில்லியன் கடனைக் குவித்துள்ளதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இன்று மறுத்துள்ளது. தங்கள் கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சித்தரிக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் திசைதிருப்பும் தன்மை கொண்டவை என்று PKNS கூறியுள்ளது.
இது PKNS-இன் ஒட்டுமொத்த நிதி நிலையையும் பிரதிபலிக்கவில்லை. RAM Ratings நடத்திய ஒரு சுயாதீன மதிப்பீடு, PKNS வலுவான மற்றும் நிலையான நிதி நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளது,” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. RAM Ratings, தங்கள் கழகத்திற்கான AA1/Stable/P1 மதிப்பீட்டைத் தொடர்ந்து பராமரித்து வருவதாக PKNS கூறியுள்ளது.



