மேற்படி நபரின் நிறுவனம், அவ் விதியை மீறி ஒரு கிலோகிராம் அரிசியை 225 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்தது.
அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்ததற்காக, முன்னணி அரிசி விநியோகஸ்தர் ஒருவருக்கு, பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விலைக்கட்டுப்பாட்டின்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு நாடு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மேற்படி நபரின் நிறுவனம், அவ் விதியை மீறி ஒரு கிலோகிராம் அரிசியை 225 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்தது.
இந்த வழக்கு, கடந்த வியாழக்கிழமை (06) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த விநியோகஸ்தர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் வகையில் செயற்படும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் குறித்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உடனடி அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

