நீர்கொழும்பு தலுபோத்தவில் அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த முகாமில் இன்று (ஆகஸ்ட் 07) அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நீர்கொழும்பு தலுபோத்தவில் அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த முகாமில் இன்று (ஆகஸ்ட் 07) அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அமைதியற்ற நிலைமை குறித்த புகாரை அடுத்து பல பொலிஸ் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கைச் சிறைகளில் ஏற்பட்டு வரும் தொடர் பதற்றங்களின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. குறிப்பாக, நேற்று மாலை கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலும், இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில், பல்லன்சேன முகாமிலும் தற்போது அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு காத்திருங்கள்.

