நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தென, பொல்பிட்டியா பகுதியில் நேற்று (03) இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் பெய்த தொடர் கனமழையைத் தொடர்ந்து, வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குறித்த குடும்பத்தினர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்:
குசும் ரத்நாயக்க (தாய்)
ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க (மூத்த மகள்)
மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய மகள்)
மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பகுதியில் தொடரும் மழையினால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

