• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அஸ்வெசும நிதி மோசடி: கைதாகிய நோர்வூட் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் – மேலும் 3 பேருக்கு சிக்கல்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அஸ்வெசும நிதி மோசடி: கைதாகிய நோர்வூட் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் – மேலும் 3 பேருக்கு சிக்கல்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
அஸ்வெசும நிதி மோசடி: கைதாகிய நோர்வூட் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் – மேலும் 3 பேருக்கு சிக்கல்!

முதற்கட்ட கணக்காய்வு அறிக்கையின்படி, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய நிதி, அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிகளவு அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நோர்வூட் பிரதேச செயலகத்தில், பயனாளிகளுக்கான சுமார் 30 லட்சம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு பெண் அதிகாரிகளை, ஹட்டன் பொலிஸின் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று (01) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் மாவட்ட நீதிமன்றப் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவின் பொறுப்பதிகாரி என்றும், மற்றொருவரும் அதே பிரிவில் பணியாற்றிய பெண் அதிகாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள், நண்பர்களின் கணக்குகளுக்கு பணம் மாற்றம்

முதற்கட்ட கணக்காய்வு அறிக்கையின்படி, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய நிதி, அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் அப்பணத்தைச் சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளும் பெற்றுக்கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் ஹற்றன் பொலிஸின் விசேட புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

அநாமதேய கடிதம் அம்பலப்படுத்திய மோசடி

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கவில்லை என பல பயனாளிகள் பாதிக்கப்பட்டதாக, நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோனுக்கு அனுப்பப்பட்ட அநாமதேய கடிதமே, இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குறித்த இரு அதிகாரிகளும் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நுவரெலியா மாவட்டச் செயலகம் மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டபோது, நிதி மோசடி உறுதி செய்யப்பட்டது.

மேலும் 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை

சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூன்று அதிகாரிகளின் பணியை இடைநிறுத்த நுவரெலியா மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்போது அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அஸ்வெசும பிரிவின் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயனாளிகளை அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டு

அஸ்வெசும பணம் கிடைக்கவில்லை என அலுவலகத்துக்கு வந்த பயனாளிகளிடம், “பணம் வந்திருந்தால் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும்; மீண்டும் அலுவலகத்துக்கு வர வேண்டாம்” என்று கூறி அச்சுறுத்தியதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்களிலும் அஸ்வெசும மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் இதுபோன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை கண்டறிய விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

சன்வே ஸ்கொயர் மாலில் தீ விபத்து | Makkal Osai

Next Post

மொத்தம் 500 மீட்டர்.. கடலுக்கு மேலே ஸ்பெயின் போட்ட பிளான்.. யாரும் உள்ளே நுழைய கூட முடியாது | Why does Spain Builds 500-Metre Floating Sea Barrier After Massive Migrant Surge at Ceuta Border

Next Post
மொத்தம் 500 மீட்டர்.. கடலுக்கு மேலே ஸ்பெயின் போட்ட பிளான்.. யாரும் உள்ளே நுழைய கூட முடியாது | Why does Spain Builds 500-Metre Floating Sea Barrier After Massive Migrant Surge at Ceuta Border

மொத்தம் 500 மீட்டர்.. கடலுக்கு மேலே ஸ்பெயின் போட்ட பிளான்.. யாரும் உள்ளே நுழைய கூட முடியாது | Why does Spain Builds 500-Metre Floating Sea Barrier After Massive Migrant Surge at Ceuta Border

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin