மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துறை ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப்பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியாட்சகர் வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி
இதனடிப்படையில், மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

