பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான அதிகாரி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

