கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன. அதன்
அடிப்படையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலைகள் :
ஓகஸ்ட் மாதத்துக்கான மாதாந்த விலை திருத்தத்தின் கீழ், எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
இன்று (ஜூலை 31) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ஜே.டி. ராஜகருணா, ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தினார்.
இதனால் தற்போது நடைமுறையிலுள்ள விலைகளே தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
இதற்கு முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன. அதன்
அடிப்படையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலைகள் :
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் – ரூ. 414
ஓட்டோ டீசல் – ரூ. 382
ஆகிய விலைகளில் எவ்வித மாற்றமும் இன்றி ஓகஸ்ட் மாதத்திலும் விற்பனை செய்யப்படும்.
அத்துடன், ஏனைய அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி நிலவுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

