
எஸ்.கௌசல்யா,பி.கேதீஸ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் வௌ்ளிக்கிழமை (31) காலை 10:30 மணியளவில், தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில், லிந்துலை – லிப்பகளை தோட்டத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முத்து நாராயணசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நபர்கள் அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமும் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
