இந்த விலைகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
RON97 பெட்ரோல் மற்றும் மானியமில்லாத RON95 பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் நாளை முதல் லிட்டருக்கு 20 சென் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
RON97 பெட்ரோலின் விலை தற்போது ரிம 4.20 ஆக இருக்கும் நிலையில், நாளை முதல் லிட்டருக்கு ரிம 4.40 ஆக விற்கப்படும். அதேபோல், மானியமில்லாத RON95 பெட்ரோலின் விலை ரிம 3.62 இலிருந்து ரிம 3.82 ஆக உயர்த்தப்படும்.
மானியமில்லாத டீசலின் விலை ரிம 4.42 இலிருந்து ரிம 4.62 ஆக அதிகரிக்கும்.
BUDI95 திட்டத்தின் கீழ் விற்கப்படும் மானியமுள்ள RON95 பெட்ரோலின் விலை தொடர்ந்து லிட்டருக்கு ரிம 1.99 ஆக இருக்கும். BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் விலை லிட்டருக்கு ரிம 2.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மானியமுள்ள பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKPS) கீழ் வழங்கப்படும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரிம 2.05 ஆகவும், மானியமுள்ள டீசல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKDS) கீழ் வழங்கப்படும் டீசலின் விலை லிட்டருக்கு ரிம 2.15 ஆகவும் தொடரும்.
இந்த புதிய விலைகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மானியமில்லாத பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த ஒரு வாரத்தில் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும், பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், தேவையற்ற பயணங்களை குறைக்கவும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை பாதுகாக்கவும், மானியச் செலவுகளின் அழுத்தத்தை குறைக்கவும் முடியும் என்று தெரிவித்துள்ளது.
