ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட்டு முடிக்க 2029 நிதியாண்டு வரை ஆகும் என்று டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் பென்டகன் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தச் செலவுத் திட்டம் விவரிக்கப்பட்டுள்ளது.
விநியோகக் காலம்
இருப்பினும், இரு மாதங்கள் கடந்தும் அந்த நிதி இன்னும் வழங்கப்படவில்லை அல்லது ஒப்பந்தங்கள் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: Fortune
இந்நிலையில், இவ்வளவு மெதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்குக் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினரும், ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் சிலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த விநியோகக் கால அட்டவணையின்படி, நிதி 2026 நிதியாண்டிற்குள் ஒதுக்கப்பட்டு, அனைத்து உதவிகளும் செப்டம்பர் 30, 2029-க்குள் முழுமையாகச் சென்றடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கி – ட்ரம்ப் சந்திப்பு
இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்திக்கவுள்ளார்.

Image Credit:
NBC News
இந்தச் சந்திப்பில் வான் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் ட்ரோன் ஒப்பந்தம் குறித்து அவர் வலியுறுத்துவார் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு, அமெரிக்க செனட் சபையின் 100 உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

