திருவள்ளூர், அஜித்தின் டயலாக்கை தனுஷ் மேடையில் சொன்னதும் ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர்.
தேசிய விருது
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், ‘ராயன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.
அஜித்தின் வசனத்தை மேற்கோள் காட்டிய தனுஷ்
மேலும் பேசிய தனுஷ், நடிகர் அஜித்தின் பிரபலமான வசனத்தை மேற்கோள் காட்டி, “நம்ம தல அஜித் சொன்ன மாதிரிதான்… ‘நீயா தோத்துட்டேன்னு ஒத்துக்கிற வரைக்கும், உன்னை யாராலயும் தோக்கடிக்க முடியாது’” என்று கூறியதும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர்.
The post அஜித்தின் டயலாக்கை மேடையில் சொல்லிய தனுஷ்.. விண்ணைப் பிளந்த சத்தம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
