• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி முன் இருக்கும் 3 சவால்கள்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி முன் இருக்கும் 3 சவால்கள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 26, 2026 3:36 PM IST

தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரஹலாத் ஜோஷி முன் இருக்கும் மூன்று முக்கிய சவால்களைக் குறித்து பார்ப்போம்.

News18
News18

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேசிய தகுதி தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து அவர், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்தியக் கல்வித்துறை அமைச்சராக இன்று (26ஆம் தேதி) கூடுதல் பொறுப்பேற்றார்.

முன்னதாக நேற்று கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரஹலாத் ஜோஷி, “கடமை உணர்வுடனும் பணிவுடனும் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கைந்து ஆண்டுகளில், தர்மேந்திர பிரதான் தேசியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்தியதுடன், பல முக்கிய முன்னெடுப்புகளையும் மேற்கொண்டார். புதிய கல்வி முறையில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், எனது முழுத் திறனையும் பயன்படுத்தி அர்ப்பணிப்புடன் எனது பொறுப்புகளை நிறைவேற்றுவேன்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மத்தியக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரஹலாத் ஜோஷி முன் இருக்கும் மூன்று முக்கிய சவால்களைக் குறித்து பார்ப்போம்.

1. அமைப்பு ரீதியான நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் மீட்டெடுத்தல்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்த ஆண்டு சுமார் 22 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு டெல்லியில் பெரும் போராட்டம் நடத்தி, இந்தப் பிரச்சனையை அனைவர் மத்தியிலும் கவனம் பெற வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்தியக் கல்வித் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஜோஷி, தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். மேலும், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, உணர்வுப்பூர்வமான மற்றும் கவனத்துடன் கூடிய நிவாரண நடவடிக்கைகளை அவர் செயல்படுத்த வேண்டியிருக்கிறது.

2. தேசியத் தேர்வுகள் முகமையை (NTA) முழுமையாகச் சீரமைத்தல்

அமைச்சராக, தேசியத் தேர்வுகள் முகமையில் (National Testing Agency) கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளைத் தடுப்பதற்காக, நிர்வாக மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை ஜோஷி மேற்பார்வையிட வேண்டியிருக்கும்.

தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கான கடுமையான சட்டங்களையும், வினாத்தாள் கசிவில் ஈடுபடும் பிராந்தியக் கும்பல்களுக்கு எதிரான கடுமையான தண்டனை நடவடிக்கைகளையும் அவர் செயல்படுத்த வேண்டியிருக்கும். காகித-பேனா அடிப்படையிலான தேர்வு முறையிலிருந்து, பாதுகாப்பான கணினி வழித் தேர்வு (CBT) முறைக்கு மாறுவது போன்ற ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் அமைச்சர் கையாள வேண்டியிருக்கும்.

3. கொள்கை அமலாக்கம் மற்றும் நிறுவன நிர்வாகம்

பல்வேறு மாநிலங்களிலும் சிக்கலான தேசியக் கல்விக் கொள்கையை (NEP) கள அளவில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பு ஜோஷியிடம் உள்ளது. தூய எரிசக்தி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் ஆகிய துறைகளில் அவர் ஏற்கனவே வகிக்கும் பொறுப்புகளைக் கையாள்வதோடு, பரந்துபட்ட கல்வித் துறையையும் அவர் திறம்பட நிர்வகிக்க வேண்டியிருக்கும்.

Read More

Previous Post

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் விடுவிக்கப்படாத 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலம் விட தீர்மானம் – Sri Lanka Tamil News

Next Post

மீண்டும் காயத்தில் சிக்கிய ஹர்திக் பாண்டியா: 2027 உலகக்கோப்பை வரை சிறப்புப் பயிற்சி தொடரும் என பிசிசிஐ தகவல் | கிரிக்கெட் செய்திகள்

Next Post
மீண்டும் காயத்தில் சிக்கிய ஹர்திக் பாண்டியா: 2027 உலகக்கோப்பை வரை சிறப்புப் பயிற்சி தொடரும் என பிசிசிஐ தகவல் | கிரிக்கெட் செய்திகள்

மீண்டும் காயத்தில் சிக்கிய ஹர்திக் பாண்டியா: 2027 உலகக்கோப்பை வரை சிறப்புப் பயிற்சி தொடரும் என பிசிசிஐ தகவல் | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin