• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவின் ரயில்களில் ஒதுக்கப்பட்டுள்ள ‘பெண்கள் பிரிவு’ பெட்டிகள் சர்வதேசக் கவனத்தைப் பெற்றன: பிரெஞ்சு ஆவணப்படத்தில் சிறப்புப் அம்சம்!

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
மலேசியாவின் ரயில்களில் ஒதுக்கப்பட்டுள்ள ‘பெண்கள் பிரிவு’ பெட்டிகள் சர்வதேசக் கவனத்தைப் பெற்றன: பிரெஞ்சு ஆவணப்படத்தில் சிறப்புப் அம்சம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியப் பொதுப் போக்குவரத்துச் சேவையான ரயில் நெட்வொர்க்கில் உள்ள ‘மகளிர் மட்டுமே பயணம் செய்யும் பிரத்யேக வகுப்பறைகள்’ (Women-only coaches) உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. பிரான்ஸ் நாட்டின் பிரபல பயண ஆவணத் தொடரான ‘Des trains pas comme les autres’ (Amazing Train Journeys)-இல் இத்திட்டம் விசேஷமாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஆவணப்படத்தின் காணொளித் துணுக்கில், கோலாலம்பூரின் இளஞ்சிவப்பு நிறக் கோடுகளால் அடையாளப்படுத்தப்பட்ட பெண்களுக்கான விசேஷ ரயில் பெட்டிகள் காண்பிக்கப்பட்டு, சர்வதேச அளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.

“மலேசியாவின் கோலாலம்பூர் மெட்ரோ இரயில்களில் சில பெட்டிகள் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு பட்டைகளால் குறிக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டிகள், பெண்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியாகப் பயணம் செய்ய உதவுகின்றன,” என்று அந்த ஆவணப்படத்தின் விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பக்கத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்:

நெரிசல் மிகுந்த வேலை நேரங்களில் பெண்கள் மட்டுமே இருக்கும் பெட்டியில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானதாகவும், ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக இருக்கும் உணர்வையும் தருகிறது என ‘Threads’ தளத்தில் பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

“அனைத்து இனம் மற்றும் மதங்களைச் சேர்ந்த மலேசியர்களும் இயல்பாகவே பாலின எல்லைகள் மற்றும் சுய மரியாதையை மதித்து நடக்கின்றனர். இது வெறும் மதப் பண்பாடு மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் சௌகரியம் சார்ந்த விஷயம்,” என்றும் பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேஸ்புக் போன்ற உலகளாவிய தளங்களில் இது குறித்துப் பேசிய வெளிநாட்டுப் பார்வையாளர்கள் சிலர் , பெண்களுக்குப் பிரத்யேகப் போக்குவரத்து வசதி அளிப்பது உலகம் முழுவதிலும் உள்ள நடைமுறைப் பழக்கம் தான் எனக் குறிப்பிட்டுள்ளனர்:

“மெக்சிகோவில் பல ஆண்டுகளாகப் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இளஞ்சிவப்புப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.” என்றும், “இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை, மதத்தோடும் தொடர்புபடுத்த தேவையில்லை. 1970-களில் நான் இங்கிலாந்து சென்றபோதே அங்குக் ‘கெஸ்ட் ஃபார் விமன் ஓன்லி’ வகுப்பறைகள் இருந்தன. இது முழுக்க முழுக்கப் பரஸ்பர மரியாதையையும் சௌகரியத்தையும் தொடர்படுத்தியது.” என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

மலேசியாவில் பெண்களுக்கான பிரத்யேக ரயில் பெட்டிகள் முதன்முதலில் 2010-ஆம் ஆண்டு ‘கெரத்தாப்பி தானா மெலாயு’ (KTM) இரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பிரசாரானா மலேசியா (Prasarana Malaysia Bhd) நிறுவனத்தால் MRT காஜாங் வழித்தடம் (Kajang Line) மற்றும் MRT புத்ராஜெயா வழித்தடம் (Putrajaya Line) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, பெண் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரிதும் துணைபுரிந்து வருகிறது.

The post மலேசியாவின் ரயில்களில் ஒதுக்கப்பட்டுள்ள ‘பெண்கள் பிரிவு’ பெட்டிகள் சர்வதேசக் கவனத்தைப் பெற்றன: பிரெஞ்சு ஆவணப்படத்தில் சிறப்புப் அம்சம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Gold Price Prediction | தங்கம் விலை பாதியாக குறையும்? நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. நிபுணர்கள் விளக்கம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது

Next Post
வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது

வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin