2 நாட்களுக்கு மொத்தமாக காலி செய்யப்படும் TCS அலுவலகம்.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!
டெல்லியில் நடக்கும் சிஜேபி கட்சி தலைமையிலான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் இதேவேளையில் பாதுகாப்புக்காக 16 மெட்ரோ நிலையங்கள் முடப்பட்டு, பல்வேறு முக்கிய பகுதிகளை பொதுமக்கள் அனுக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட துவங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தனது டெல்லி அலுவலக ஊழியர்களை நொய்டா அல்லது குருகிராம் அலுவலகத்திற்கு மாற உத்தரவிட்டு உள்ளது. அல்லது ஊழியர்கள் தங்களின் அணியின் மேனேஜரிடம் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி பெற வலியுறுத்தியுள்ளனர்.

ஜூலை 23-24 ஆம் தேதிக்கு டெல்லியில் PTI கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நொய்டா அல்லது குருகிராம் அலுவலகத்திற்கு சென்று பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளனர். மத்திய டெல்லி மற்றும் ஜந்தர் மந்தர் பகுதியில் CJP கட்சியினரின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கும் வேளையில் டிசிஎஸ் உட்பட பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய துவங்கியுள்ளனர்.
இதேபோல் டிசிஎஸ் நிர்வாகம் டெல்லி ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஆபீஸ் கொள்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது. தற்போது கொடுத்துள்ள வழிமுறைகள் 2 நாட்களுக்கும், டெல்லி அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளது.
வொர்க் ஃப்ரம் ஆபீஸ் கொள்கை டிசிஎஸ் நிறுவனத்தில் மிகவும் முக்கியமாக பாலோ செய்யப்படுகிறது, சமீபத்தில் டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஊழியர்களின் போனஸ் தொகை அவர்கள் எத்தனை நாட்கள் அலுவலகத்திற்கு வருகிறார்கள் என்பதை பொருத்தே அமையும், அலுவலகத்திற்கு வந்து விதிகளை பின்பற்றாத ஊழியர்களுக்கு போனஸ் தொகை கட்டாயம் குறைக்கப்படும் என விளக்கம் கொடுத்தது.
இந்த அறிவிப்புக்கு பின்பு பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை தொடர்கின்றனர். இந்த நிலையில் டெல்லி போராட்டம் வொர்க் ஃப்ரம் ஆபீஸ் கொள்கையை எந்த விதத்திலும், யாருக்காகவும் தளர்த்தவில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது பெரும்பாலான ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் டிசிஎஸ் தான் NCR பகுதியில் பெரிய ஊழியர்கள் படையை கொண்டு உள்ளது. டெல்லி அலுவலகம், நொய்டா, குருகிராம் என மூன்று இடத்திலும் அலுவலகம் + டெலிவரி சென்டர்களை வைத்துள்ளது.
