பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஷேக் ஈசா இராணுவத் தளத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் இராணுவம் உரிமை கோரியுள்ளது.
இராணுவத்தின் கூற்றுப்படி, இந்தத் தளம் அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் முக்கிய மையங்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்க நடவடிக்கைகள்
மேலும் இது அமெரிக்க நடவடிக்கைகளின் மையமாகவும் விளங்குகிறது என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்வதிலிருந்து எதிரி தடுக்கப்படும் வரை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

