10 நாள் போர் நிறுத்தம்.. மீண்டும் களத்தில் குதிக்கும் பாகிஸ்தான்.. ஈரான் முடிவு என்ன?
அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் மீண்டும் சூடுப்பிடித்திருக்கும் வேளையில், இதை நிறுத்த மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தான், கத்தார் ஒரு முக்கியமான திட்டத்தை முன்வைத்துள்ளது.
அதாவது அடுத்த 10 நாட்களுக்கு அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டு கடந்த மாதம் முடங்கிய அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கும் திட்டத்தை அமெரிக்கா – ஈரான் நாடுகளிடம் வைத்துள்ளது.

கடந்த மாதம் ஜூன் 17ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் 60 நாட்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில் ஓமான் நாட்டின் வழியாக அமெரிக்கா பாதுகாப்பில் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் வழித்தடத்தில் வெளியேறிய விவகாரம் மிகப்பெரியதாக வெடித்த நிலையில் மீண்டும் போராக மாறியது.
இதன் எதிரொலியாக அமெரிக்கா கடந்த 7-9 நாட்களாக ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளத்தின் மீது தாக்குதல் நடத்தி இருபக்கம் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தான், கத்தார் நாடுகள் 10 நாள் போர் நிறுத்தம் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் கடந்த 10 நாட்களின் ஈரான் மீதான டிரம்ப் நிலைப்பாடு முற்றிலும் மாறியுள்ளது, இதில் முக்கியமாக ஈரான் உடனான Cease Fire முடிந்தது, இனி எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்ற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்த பதிவில், என்னை கொலை செய்ய ஈரான் முயற்சி எடுத்தால் ஈரானை தாக்க 1000 ஏவுகணைகள் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.
கடந்த 9 நாள் தாக்குதலில் ஈரானின் IRGC படைகள் சிரியா, குவைத், பஹ்ரைன் நாடுகள் மீது பெரும் தாக்குதல் நடத்தியுள்ளது, இதேபோல் ஈரான் நாட்டின் ஆதரவு கொண்ட போராளிக் குழுக்களின் அமைப்பான இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் (Islamic Resistance in Iraq – IRI) டிரம்ப் தலைக்கு 10 மில்லியன் டாலர் தொகையை பரிசாக அறிவித்துள்ளது.
அதாவது டிரம்ப்-ஐ கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் தொகை பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது 2020-ல் ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தளபதி அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரைக் அமெரிக்க தனது ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதிற்கு பழிவாங்கும் விதிமாக அறிவித்துள்ளது.

