Last Updated:
இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. தொடரை வெல்ல இரு அணிகளும் மல்லுக்கட்டும்.
கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. தொடரை வெல்ல இரு அணிகளும் மல்லுக் கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களை எடுத்து ஏமாற்றத்தை அளித்த ரோகித் சர்மா, தொடரைத் தீர்மானிக்கும் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


