• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போதைப்பொருள் கடத்தல்: 3 கிலோ கஞ்சாவுடன் ஹாங்காங்கில் மலேசிய வாலிபர் கைது! புக்கிட் அமான் உறுதி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
போதைப்பொருள் கடத்தல்: 3 கிலோ கஞ்சாவுடன் ஹாங்காங்கில் மலேசிய வாலிபர் கைது! புக்கிட் அமான் உறுதி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சுமார் 3 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மொட்டுகளை (Cannabis buds) கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ், 19 வயதுடைய மலேசிய வாலிபர் ஒருவர் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை மலேசியப் போலீசார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தத் தகவலை ஹாங்காங் அதிகாரிகள் மலேசியப் போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

கைது செய்யப்பட்ட 19 வயது வாலிபர் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர். மலேசியாவில் இவர் மீது இதற்கு முன் எந்தவொரு குற்றப் பின்னணியும் (Criminal Record) இல்லை.

இவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஹாங்காங் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், அந்த வாலிபரின் சரிபார்க்கப்பட்டப் பயணப் பெட்டியிலிருந்து (Checked baggage) 3 கிலோ கிராம் கஞ்சா மொட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் சந்தை மதிப்பு சுமார் HK$500,000 (RM260,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, இந்த வாலிபர் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலால் (Drug Syndicate) பண ஆசை காட்டப்பட்டு, போதைப்பொருள் கடத்தும் ‘குருவி’யாக (Drug Mule) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார். ஹாங்காங் சுங்கத்துறையினர் அந்த வாலிபரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாங்காங்கின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின்படி (Dangerous Drugs Ordinance), போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக HK$5 மில்லியன் (RM2.6 மில்லியன்) அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Crude oil | கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவிற்கு செக் வைத்த டிரம்ப் அரசாங்கம்… வெளியான ஷாக் தகவல்! | உலகம் போட்டோகேலரி

Next Post

பட்ட நூல்களால் விமானங்களுக்கு ஆபத்து: இலங்கை விமானப்படை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
பட்ட நூல்களால் விமானங்களுக்கு ஆபத்து: இலங்கை விமானப்படை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

பட்ட நூல்களால் விமானங்களுக்கு ஆபத்து: இலங்கை விமானப்படை எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin