கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம், நாளை முதல் ஒரு வாரத்திற்குத் தனது கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் துணைவேந்தர், பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகம் மூடப்படாது என்றும், அனைத்து ஊழியர்களும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.
விடுதிகள் திறப்பு
அத்தோடு, அனைத்து விடுதிகளும் திறந்தே வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை, சட்டம், கல்வி மற்றும் மேலாண்மை பீடங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

