Last Updated:
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு வாகனத்தையாவது காட்ட முடியுமா என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சவால் விடுத்துள்ளார்.
கச்சா எண்ணெய்க்கு மாற்றாக Biofuel எனப்படும் உயிரி எரிபொருட்களை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, E20 என்ற பெயரில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த வகை பெட்ரோல், தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு உகந்ததல்ல என்றும், அதனால் வாகனங்கள் பழுதடைவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, E20 பயன்பாட்டால் இதுவரை எந்த வாகனமும் பழுதாகவில்லை என தெரிவித்தார். இது அறிவியல்பூர்வமான நடவடிக்கை என்றும், இதன் மூலம் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பலன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


