Last Updated:
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களுக்கு படகு மூலம் உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
சீனாவில் பெய்த கனமழை காரணமாக, பல்வேறு மாகாணங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சீனாவை தாக்கிய மேசாக் புயலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் வாகனங்கள் மூழ்கி சேதமடைந்தன. குறிப்பாக குவாங்டாக் மாகாணம் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்குள்ள குடியிருப்புகள், சாலைகள் அனைத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், படகுகள் மூலம் மீட்புப் பணி நடந்து வருகிறது.
சுமார் ஒன்றரை லட்சம் பேர் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை ஓய்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களுக்கு படகு மூலம் உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கனமழை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

