Last Updated:
இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொண்டது. அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் மாற்று ஆட்டக்காரர் டெசிரே டூயேவை (Desire Doue), பராகுவே வீரர் டீகோ கோமஸ் பாக்ஸிற்குள் வீழ்த்தினார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது.
கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே (Kylian Mbappé), மிகத் துல்லியமாக கோல் அடித்து பிரான்ஸை முன்னிலைப்படுத்தினார். அந்த ஒரே கோலே வெற்றியைத் தீர்மானிக்க, 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மொராக்கோ அணியில், அசெடின் ஒனாஹி இரண்டு கோல்களும், மாற்று ஆட்டக்காரர் சுஃபியான் ரஹிமி ஒரு கோலும் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.


