இது குறித்து சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் டாக்டர் முகமது உமர் விளக்குகையில், “போர்க்காலச் சூழல் போன்ற விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளில், உடலை அடக்கம் செய்யத் தாமதப்படுத்துவதற்கும், குளிரூட்டப்பட்ட முறையில் உடலைப் பாதுகாப்பதற்கும் ஷியா (Shia) பிரிவு சட்டங்களில் சில விலக்குகள் உள்ளன. இதன்படி, கமேனியின் உடலுக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்தாமல், அதிநவீன மிகக் குளிர்ந்த குளிர்பதனக் கிடங்கில் (Refrigerated Cold Storage) வைத்து உறைநிலையில் 4 மாதங்களாகப் பாதுகாத்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்.
அரசியல் பின்னணி!
ஈரானில் மிக நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த ஒரு உச்ச தலைவரின் இறுதிச்சடங்கை, சாதாரணப் போர்க்களச் சூழலில் அவசர அவசரமாக நடத்த ஈரான் அரசு விரும்பவில்லை. அமெரிக்காவுடன் ஒரு சுமுகமான தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்படும் வரை காத்திருந்து, தற்போது உலக நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கமேனிக்கு நெஞ்சார்ந்த மிகப்பெரிய பிரியாவிடை கொடுக்க ஈரான் திட்டமிட்டிருக்கிறது.
இஸ்லாமிய சட்ட விதிகளுக்குள் இத்தகைய விலக்குகளைப் பெற்று, 4 மாதங்களுக்குப் பிறகு கமேனியின் இறுதி ஊர்வலத்தை ஈரான் அரசு நடத்துவது சர்வதேச அளவில் டாக்-ஆக இருக்கிறது.
