ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம், வணிக சிலிண்டர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.
அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அறிக்கை கூறும் முக்கிய புள்ளிகள்…
> வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அரசு நீக்கியுள்ளது.

> தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “பல்க் எல்பிஜி’ (Bulk LPG) விநியோகம், இப்போது நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவில் 50% வரை தளர்த்தப்பட்டுள்ளது.
இது வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்குப் பெரியளவில் கைகொடுக்கும்.
> மேற்கு ஆசிய நெருக்கடியின்போது, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் (Essential Commodities Act) கீழ் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
