Last Updated:
பாலஸ்தீனியப் பகுதியில் நிகழ்ந்த மொத்த மரணங்களில் 30 சதவீதம் குழந்தைகள்தான் என்ற அதிர்ச்சி தரவுகளை வெளியிட்டுள்ளது ஐ.நா.
பாலஸ்தீன குழந்தைகளை வேண்டுமென்றே கொன்று, இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
ஹமாஸ் ஆயுத குழுவுக்கு எதிராக கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், 2023 அக்டோபர் முதல் கடந்த மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து ஐ.நா விசாரணை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான முரளிதர் தலைமையிலான இந்த ஆணையம், தற்போது 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Israeli forces have killed over 20,000 children & injured 44,000 more since 7 Oct. 2023, Srinivasan Muralidhar, chair of the @UN Commission of Inquiry on the Occupied Palestinian Territory & Israel, told reporters today. #HRC62
More on their new report ➡️ https://t.co/gK2KhtlgFb pic.twitter.com/ZQGUQkJKxD— UN Human Rights Council Investigative Bodies (@uninvhrc) June 23, 2026
அதன்படி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்திருப்பதாகவும் முரளிதர் தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதியில் நிகழ்ந்த மொத்த மரணங்களில் 30 சதவீதம் குழந்தைகள்தான் என்ற அதிர்ச்சி தரவுகளையும் வெளியிட்டார். மேற்குகரையில் நடக்கும் போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேலிய அதிகாரிகளும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுமே முழு பொறுப்பு என்றும் முரளிதர் தெரிவித்தார்.
Jun 25, 2026 10:01 AM IST
“20,000 பாலஸ்தீன பிஞ்சுகளை வேண்டுமென்றே…” – இஸ்ரேல் குறித்து அதிர்ச்சி அறிக்கை கொடுத்த ஐ.நா!


