Last Updated:
சியாட்டில் நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் போஸ்னியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தன.
மியாமி நகரில் நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை ஸ்காட்லாந்து எதிர்கொண்டது. இதில், தொடக்கம் முதலே பிரேசில் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்த பிரேசில் அணி, இரண்டாவது பாதியில் ஒரு கோல் அடித்தது. ஸ்காட்லாந்து அணியால் இறுதி வரை கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அட்லாண்டா நகரில் நடைபெற்ற மற்றொரு குரூப் சி பிரிவு ஆட்டத்தில் மொராக்கோ – ஹைதி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் பரபரப்பு கூடியது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆக்ரோசமாக ஆடிய மொராக்கோ அணி 78 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் அடுத்த இரு கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் மொராக்கோ 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சியாட்டில் நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் போஸ்னியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.


