கடந்த 24 மணித்தியாலங்களில் 67 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட் (Chris Wright) இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் போக்குவரத்தின் அளவானது போர் தொடங்குவதற்கு முன்னர் இருந்த கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் போக்குவரத்து அளவை ஒத்ததாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் போரைக் காரணம் காட்டி தாங்கள் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரானின் கூட்டு இராணுவக் கட்டளையகம் அறிவித்திருந்தது.
இருப்பினும் ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஈரான் இன்னும் நீரிணையின் மத்திய கப்பல் போக்குவரத்துப் பாதையில் உள்ள கடற்படை கண்ணிவெடிகளை அகற்றவில்லை எனத் தெரிவித்துள்ள கிரிஸ் ரைட், எனினும் அமெரிக்கா அதற்குத் தெற்கே ஒரு தனி மாற்று வழிப்பாதையைத் திறந்து அதன் வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கி அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மாற்றுப் பாதையை ஏற்படுத்தியிருந்தாலும் சில வணிகக் கப்பல் நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு குறித்து இன்னும் கவலைகொண்டிருப்பதை அமெரிக்க அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
