தமது குடும்ப நிலை காரணமாக யாசகம் கேட்கும் மனிதர்கள் சிலர். ஆனால் சிலரோ ஏமாற்றும் பேர்வழிகளாக தமது உடலை வருத்தி தொழில் ஏதும் செய்யாமல் யாசகம் கேட்பவர்களும் உண்டு.
ஆனால் மனிதர்களை மிஞ்சும் வகையில் செயற்கை நுண்ணறிவு படைத்த ரோபோ ஒன்று சீனாவில் வீதியில் நின்று யாசகம் கேட்பதுதான் பலரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்
இந்த ரோபோ சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தது. இது தெருவில் நின்று, ‘எனக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள வழியில்லை. அதற்காக நீங்கள் எனக்குப் பணம் கொடுத்தால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று யாசகம் கேட்கிறது.
பணம் பெறுவதற்காக, அருகில் QR குறியீடு கொண்ட ஒரு படத்தையும் அந்த ரோபோ வைத்திருப்பது காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மக்களிடையே அனுதாபத்தைத் தூண்டுவதற்காக அந்த ரோபோ ஒரு இதமான இசையை இசைக்கிறது.
இது ஒரு விளம்பர உத்தி
இந்த ரோபோ, யூனிட்ரீ ஜிஐ (Unitree Gi) எனப்படும் சீன ரோபோவின் ஒரு உயர் தொழில்நுட்ப மொடல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுசெயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படுகிறது.
ரோபோ உதவியற்றதாகவும், யாசிப்பதாகவும் சித்தரிக்கப்படுவது ஆராய்ச்சியின் விளைவே என்று அதன் உரிமையாளர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ‘யூனிட்ரீ ஜி1’ ரோபோ உதவியற்ற ரோபோ அல்ல என்றும், இது ஒரு விளம்பர உத்தி என்றும் அந்த ரோபோவுக்குச் சொந்தமான தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்த ரோபோ எத்தனை பேருக்கு உதவும் என்பதைக் கண்டறிய அந்தத் தொழில்நுட்ப நிறுவனம் முயன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

