Last Updated:
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், ரகசிய காதலனுடன் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்த பெண், தட்டிக் கேட்ட கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மாவட்டத்தில் உள்ள பில்கானா பகுதியைச் சேர்ந்தவர் ராம் கிஷோர் குப்தா. இவரது மகன் மனிஷ் குப்தா, மகள் பூனம் குப்தா, மனிஷ் மளிகை சந்தையில் ஒரு தரகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பிர்ஹானா சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிஹாரிகா காஷ்யப்பை அவர் சந்தித்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி அன்று மணீஷ் மற்றும் நிஹாரிகாவின் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு ரியான்ஷ் குப்தா என்ற 6 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஜம்முவைச் சேர்ந்த ஒரு இளைஞர் நிஹாரிகாவிற்கு அறிமுகமானார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேச ஆரம்பித்தனர். விடிய விடிய அந்த இளைஞருடன் சாட்டிங் செய்ய ஆரம்பித்தார் நிஹாரிகா இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் மணிசுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
மணீஷின் எதிர்ப்பு நிஹாரிகாவிற்குப் பிடிக்காததால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை மூண்டது. ஒரு கட்டத்தில் கணவனின் எதிர்ப்பு வலுத்த போது காவல்நிலையத்திற்கு சென்று வரதட்சணை கொடுமை வழக்கு தொடுத்துள்ளார் நிஹாரிகா. ஆனால் போலீசார் அவர்களுக்கிடையே பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தன்று மணிஷின் 6 வயது மகன் ஓடி வந்து தனது அம்மா யாருடனோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பதாக தந்தையிடம் கூறியிருக்கிறான்.
இதனால் ஆத்திரமடைந்த மணிஷ் நிஹாரிகாவை கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அப்போது நிஹாரிகாவுடன் செல்போனில் இணைப்பில் இருந்த அவரது காதலன், ”இன்றே அவளை முடித்துவிடு’ என கூற. ஆவேஷமடைந்த நிஹாரிகா உடனே காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது கணவனின் வயிற்றிலேயே சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர், குடும்பத்தினர் அவரை பிர்ஹானா சாலையில் உள்ள கேபிஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஹல்த்வானியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நஹாரிகாவை கைது செய்தனர். மருமகள் தனது காதலன் அங்கரேஸின் தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக மாமனார் தனது புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


