செம்மணி மனித புதைகுழியிலிருந்து நேற்றைய தினமும் (19-06-2026) மூன்று எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, புதிதாக ஏழு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 29ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் (19-06-2026) நடைபெற்றன.
அகழ்வுப் பணி
இதனடிப்படையில், இதுவரையிலான அகழ்வுப் பணிகளின் போது 394 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 370 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் (OMP) ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரும் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

