அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) ஆகியோர் கையெழுத்திடக்கூடும் என்றும் இந்த யோசனை இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் (Tasnim) செய்தி முகமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், இந்த யோசனை முன்மொழியப்பட்டுத் தற்போது பரிசீலனையில் உள்ளது என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ கையெழுத்து
சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ கையெழுத்து விழாவில் கலந்துகொள்வதற்கான ஈரானின் திட்டங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் செய்தித் தொடர்பாளர் பகாய் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா சார்பில் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) மற்றும் ஈரான் சார்பில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) ஆகியோர் முறையே பிரதிநிதிகளாகப் பங்கேற்பார்கள் எனத் தெஹ்ரான் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

