Last Updated:
இந்தியாவைச் சேர்ந்த திஷா இயற்கை எரிவாயு கப்பல் உள்பட பல கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கியதால், பல நாடுகளும் நிம்மதி தெரிவித்துள்ளன.
கடந்த மூன்றரை மாதங்களாக நீடித்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஈரான் உடனான போர், இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான அமைதி ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) அறிவித்திருந்தார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை எந்த கட்டணமும் இன்றி திறக்க அனுமதி வழங்குவதாக ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் டிரம்ப். இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல்கள் கடக்கத் தொடங்கின. இந்தியாவைச் சேர்ந்த திஷா இயற்கை எரிவாயு கப்பல் உள்பட பல கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கியதால், பல நாடுகளும் நிம்மதி தெரிவித்துள்ளன.
இதையடுத்து, இந்தியப் பிரதமர் மோடி இந்த போர்நிறுத்தத்தை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி, பல நாடுகளில் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்திருந்தது மேற்கு ஆசிய மோதல். இதை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வை நான் வரவேற்கிறேன்.
I welcome the understanding reached between the United States and Iran on ending the conflict in West Asia, which has caused serious economic disruption across the world and led to loss of life in many countries.
India hopes that the implementation of this understanding will…— Narendra Modi (@narendramodi) June 15, 2026
இந்தப் புரிந்துணர்வைச் செயல்படுத்துவது, அப்பகுதியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் மற்றும் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது. எஞ்சியிருக்கும் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து, ஒரு நீடித்த இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்


