இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அமீரகத்தின் அபுதாபியில்
இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்
‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர் மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இரு குற்றவாளிகளே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (13) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
புகைப்படங்கள் மற்றும் காணொளி
அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர்.

மத்திய கிழக்கு போரின் போது ஈரான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்திய ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்த குற்றத்திற்காக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
வாக்குமூலங்களைப் பதிவு
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், ‘மோதர சத்துர’ கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதேபோல், ‘புளூமெண்டல் சங்கா’ என்பவரிடம் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

