Last Updated:
இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கடினமாக கேட்சுகளைப் பிடித்த அனுபவமே தற்போது உதவியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியரொருவர்.
ஜன்னல் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை லாவகமாக மீட்ட இந்தியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கிழக்கு லண்டனின் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையில் இருந்து ஜன்னல் வழியாக 3 வயது சிறுமி எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். ஜன்னல் விளிம்பைப் பிடித்து தொங்கிய சிறுமி, அலறித்துடித்தார். இதை பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர்.
Mohamed Jesil, a restaurant manager in London, said he acted on “pure instinct” when he saw a young girl hanging from the balcony ledge.
Jesil and a police officer were able to catch the girl when she fell. pic.twitter.com/VojHtqLHLN
— The Washington Post (@washingtonpost) June 12, 2026
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியை மீட்க முயன்றனர். அப்பகுதியில் வசிக்கும் இந்தியரான முகமது ஜெசிலும் சிறுமியை மீட்க உதவினார். அப்போது, சிறுமி கீழே விழ ஜெசில் அவரை லாவகமாகப் பிடித்தார். இதை கீழே இருந்து பார்த்தவர்கள் ஆரவாரத்துடன் கைத்தட்டி பாராட்டினர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து பேசிய ஜெசில், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கடினமாக கேட்சுகளைப் பிடித்த அனுபவமே தற்போது உதவியதாகத் தெரிவித்தார்.


