முன்னதாக அமெரிக்க மத்திய கமெண்ட் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள், கண்காணிப்பு மையங்கள், தகவல் பரிமாற்று மையங்கள், விமானப்படை மையங்கள் ஆகியவை குறிவைத்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் நாட்டு கடற்படை, விமானப்படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காப்புக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.


