உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், ஈரான் மீது மற்றொரு தாக்குதலை தொடுப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி எயால் ஜமீர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலானது, கடுமையான ஒரு பேரிடியைக் கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட தயாரிப்பு மட்டுமே என்று ஜமீர் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தால் அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்கனவே பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவத் தளபதியின் இந்த அதிரடி அறிக்கை பிராந்தியத்தில் பெரும் போருக்கான சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தற்காலிக போர்நிறுத்தம்
இஸ்ரேல் ராணுவம் அடுத்தகட்ட தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஈரானுக்கு எதிராக மேலும் எந்தவொரு பதில் தாக்குதலையும் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்க ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிராந்தியத்தில் ஏற்கனவே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த உடன்பாட்டைப் பாதுகாக்கவும், அமெரிக்கா ஈரானுடன் மேற்கொள்ள விரும்பும் புதிய உடன்படிக்கைகளுக்கு இந்த மோதல்கள் முட்டுக்கட்டையாக அமைந்துவிடக் கூடாது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

